WhatsApp Image 2022 04 26 at 1.21.07 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் இல்லம் முன்பு முளைத்தது ‘மைனாகோகம”

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி காலி முகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம” என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி பிரதமர் இல்லம் முன்பாகவும் கடந்த சில நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே அங்கு, ‘மைனாகோகம” எனும் பெயரில் புதிய கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் நிராகரித்திருந்தது.

ஏற்கனவே காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் கிராமம் அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 26 at 1.21.01 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...