phi 2
இலங்கைசெய்திகள்

3ஆவது டோஸாக பைஸர்!

Share

மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட , நாட்பட்ட நோய் உடைய 30–60 வயதுக்குபட்டவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சினோபார்ம் தடுப்பூசியால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கொரோனாத் தொற்றால் இறந்தவர்களில் 19 சதவீதமானவர்கள் இரு டோஸ்களையும் பெற்றவர்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி இந்தக் கோரிக்கைக்கு அமைவாக மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...