சீன பசளைd
செய்திகள்இலங்கை

சீனப் பசளையில் பக்ரீறியா! –  இறக்குமதிக்கு தடை

Share

சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த பசளையில் காலநிலைக்கு பொருத்தமற்ற பக்ரீறியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சீனாவிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரும்போக நெல் உற்பத்திக்காக சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில் பசளை மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

குறித்த பசளை மாதிரிகளில் விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கையின் மண்வளத்துக்கும் காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்வதை நிறுத்தப்பட்டால் பெரும்போக நெற் உற்பத்திக்கு பசளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...