petrol and diesel
இலங்கைசெய்திகள்

பெற்றோல் விநியோகம் இடம்பெறமாட்டாது!

Share

” அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம்.” – என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார்.

அத்துடன், இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது, எனவே, சமையல் எரிவாயுவை பெறுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கோரினார். சமையல் எரிவாயு நாளை முதல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எனினும், வழமைபோல டீசல் விநியோகிக்கப்படுகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலை நீங்க இன்னும் 20 நாட்கள்வரை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...