image 6cf903418b
இந்தியாஇலங்கைசெய்திகள்

நளினி உள்ளிட்டோர் விடுதலை! – உச்ச நீதிமன்றம் செல்கிறது அரசு

Share

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருந்தது.

அதேபோல் சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கு என்பதால், இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் நீதிமன்றம் மத்திய அரசை விசாரித்திருக்க வேண்டும் என மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அல்லது விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

#India

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
FB IMG 1768978130584 1024x675 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிர்ச்சித் தகவல்: கொழும்பு பேருந்து ஓட்டுநர்களில் 60% பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களில் சுமார் 60...

24 66f87c7462569
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கல்வித்துறையில் டிஜிட்டல் புரட்சி: பாதுகாப்பான ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க பிரதமர் ஹரிணி திட்டம்!

இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாணவர்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்...

grok
செய்திகள்உலகம்

எக்ஸ் தளத்தின் Grok AI மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி விசாரணை: சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘Grok’, பெண்கள் மற்றும்...

1764736123 DITWAH 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூறாவளி நிவாரணப் பணிகள் நிறைவடையும் தருவாய்: 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்குச் சுத்திகரிப்புக் கொடுப்பனவு வழங்கல்!

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் செயல்முறை தற்போது நிறைவடையும் தருவாயில்...