24 66f87c7462569
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கல்வித்துறையில் டிஜிட்டல் புரட்சி: பாதுகாப்பான ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க பிரதமர் ஹரிணி திட்டம்!

Share

இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாணவர்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான டிஜிட்டல் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்ப சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்தும் போது, அவர்களின் வயதுக்கு ஏற்ப சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டக் கட்டமைப்புக்குள் இத்திட்டங்கள் அமையும்.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகப் பெறப்படும் டிஜிட்டல் சாதனங்கள், எவ்வித பாரபட்சமுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

டிஜிட்டல் கருவிகளைக் கையாள்வதற்குத் தேவையான பயிற்சிகள் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நவீன உபகரணங்களை வினைத்திறனாகப் பயன்படுத்த முறையான மனிதவளத் திட்டமிடல் அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சின் ‘இசுருபாய’ அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ‘Huawei’ நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ (UNESCO-INRULED) பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் கிராமப்புற பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட் வகுப்பறை’ (Smart Classroom) வசதிகள் மற்றும் ஊடாடும் திரைகளை (Interactive Screens) வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் மாற்றமானது வெறும் உபகரணங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கையாள்வதை உறுதிப்படுத்தக் காவல்துறையின் இணையக் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.

இந்தத் திட்டமானது இலங்கையின் கல்வித் தரத்தை உலகளாவிய ரீதியில் உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...