gotabaya
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னார் காற்றாலை மின் திட்டம்! – எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிறது ஜனாதிபதி தரப்பு

Share

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர், வெளியிட்ட கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

“மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக கோப் குழு விசாரணையின் போது, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை திட்டவட்டமாக மறுக்கின்றேன்.” – என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ இந்தத் திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார் என ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபைத் தலைவர், கோப் குழுவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...