lohan
இலங்கைசெய்திகள்

லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை!

Share

லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அண்மையில் சென்ற லொஹான் ரத்வத்த, சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – எனத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறித்த பதவியில் இருந்து மட்டுமே விலகினார். ஆயினும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக இன்னமும் நீடிக்கிறார்.

இந்த நிலையில்,லொஹான் ரத்வத்த மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் உட்பட அரசியல்கள் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலதரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...