நாடாளுமன்றம்
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை! – அபராதத் தொகை அதிகரிப்பு

Share

அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த அபராதத் தொகையை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டி சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை விற்பனையாளர்கள் அதிகரித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர் என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டவரைபின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்தின்போது அபராதத்தொகை தொடர்பான திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...