Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசால் பயன் இல்லை! – அநுர வலியுறுத்து

Share

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ராஜபக்ச குடும்பம் அதிகார போதையில் மயங்கியுள்ளது. மஹிந்த உள்ளிட்ட குழுவினரே வன்முறைக்கு வழிவகுத்தனர். ஆதரவாளர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்பதை மஹிந்த ராஜபக்ச தமதுரையில் தெளிவுபடுத்தவில்லை. மோதத் தயார் என்ற தகவலையே அவர் வழங்கினார். எனவே, நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்ச பொறுப்பை ஏற்கவேண்டும். மக்களின் நியாயமான போராட்டங்களை ஆளுங்கட்சியினரே வன்முறையாக மாற்றினர்.

சில ஆயுதங்கள் வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் அலரிமாளிகையில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதலாகும். வன்முறையாளர்கள் காலிமுகத்திடல் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை. போராட்டக்காரர்களை நோக்கியே கண்ணீர்புகைகூட வீசப்பட்டுள்ளது. இதற்கு பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதியால் நாட்டை ஆளமுடியாது. அவரை வைத்துக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதிலும் பயன் இல்லை. எனவே, அவரும் பதவி விலக வேண்டும். சம்பவத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...