Gulab stormdd scaled
இலங்கைசெய்திகள்

வங்கக்கடலில் உருவாகிறது குலாப் புயல்

Share

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாளை வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை மற்றும் விசாகப்பட்டினம், கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு சாத்தியம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 75–85 கிலோமீற்றரில் இருந்து 95 கிலோமீற்றர் வரை இருக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...