ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேற்படி உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டு உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.