sunshine coast filling up car
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்.பிக்களுக்கு இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருள்!

Share

நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் எம்.பிக்களுக்கு தாம் வசிக்கும் பிரதேசங்களிலேயே இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான திட்டம் எதுவும் கிடையாதென பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கிணங்க, அவர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடைபெறும் தினத்தில் நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அதற்கான பணிப்புரைகளை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பதற்காக வருகைதரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பிரதான வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக மூடப்படுவதுடன்அப்பகுதியில் குடியிருப்போர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

அத்துடன் நாடாளுமன்ற வீதிகளிலும் அதனையண்டிய பிரதேசங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் இராணுவத்தினரின் கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அதிதிகள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பார்வையாளர்களுக்கான கலரியும் மூடப்பட்டுள்ளது. அதேவேளை நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் ஊடகவியலாளர்களுக்கு புதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...