Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு நிறுவனங்களிடம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

Share

இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை (27) அறிவித்தார்.

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து சீனாவின் சினோபெக், யுனைட்டட் பெற்றோலியம் ஒஃப் அவுஸ்திரேலியா மற்றும் யுஎஸ்ஏ ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில்  20 வருடங்களுக்கு பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும்  விற்பனை செய்வதற்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இயக்கப்பபடும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒவ்வாரு நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்பதுடன் புதிய இடங்களில் 50 நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...