douglas devananda
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் வரலாற்றில் இடம்பிடித்த டக்ளஸ்!

Share

இலங்கை நாடாளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ,18, 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார்.

அத்துடன், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிக்கபோவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டில்தான் டக்ளஸ் தேவானந்தாவின், நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது.

2001 இல் சந்திரிக்கா அம்மையார், தலைமையிலான கூட்டணி அரசில், 17 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக ஆட்சிக்கான ஆரம்ப புள்ளியாக கருதப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா வாக்களித்தார்.

2010 இல், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்து – சமாதி கட்டி – சர்வாதிகாரத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் டக்ளஸ் தேவானந்தா ‘ஆமாம் சாமி’ போட்டார்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் மைத்திரி – ரணில் ஆட்சியில் முன்வைக்கப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தையும் டக்ளஸ் தேவானந்தா ஆதரித்தார்.

நாடாளுமன்றத்துக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை, மீண்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கரங்களுக்குள் கொண்டுவரும் வகையில் 2020 இல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் டக்ளஸ் தேவானந்தா பச்சைக்கொடி காட்டினார்.

சர்வக்கட்சி அரசாங்கம் என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டத்தையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே அவர் உள்ளார். இது தொடர்பான அறிவிப்பையும் விடுத்துள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றத்தில் (தற்போதை) அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில், தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன உட்பட 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி 4 சட்டங்களுக்கும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...