douglas devananda
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் வரலாற்றில் இடம்பிடித்த டக்ளஸ்!

Share

இலங்கை நாடாளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ,18, 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார்.

அத்துடன், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிக்கபோவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டில்தான் டக்ளஸ் தேவானந்தாவின், நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது.

2001 இல் சந்திரிக்கா அம்மையார், தலைமையிலான கூட்டணி அரசில், 17 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக ஆட்சிக்கான ஆரம்ப புள்ளியாக கருதப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா வாக்களித்தார்.

2010 இல், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்து – சமாதி கட்டி – சர்வாதிகாரத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் டக்ளஸ் தேவானந்தா ‘ஆமாம் சாமி’ போட்டார்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் மைத்திரி – ரணில் ஆட்சியில் முன்வைக்கப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தையும் டக்ளஸ் தேவானந்தா ஆதரித்தார்.

நாடாளுமன்றத்துக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை, மீண்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கரங்களுக்குள் கொண்டுவரும் வகையில் 2020 இல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கும் டக்ளஸ் தேவானந்தா பச்சைக்கொடி காட்டினார்.

சர்வக்கட்சி அரசாங்கம் என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டத்தையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே அவர் உள்ளார். இது தொடர்பான அறிவிப்பையும் விடுத்துள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றத்தில் (தற்போதை) அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில், தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன உட்பட 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி 4 சட்டங்களுக்கும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...

ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...