f1f0d4a7 f2d3 416a a31a cec01de12954
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாண மீனவர்கள் இந்தியாவில் கைது!

Share

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப்படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம்சாட்டி இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த படகு தற்போது நாகை பட்டினம் துறைமுகத்திற்குகொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக இந்தியத் தரப்பு செய்திகள் தெரிவிப்பதோடு, நாளைய தினம் நீதிபதியின் முன்பாக ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வல்வெட்டித்துறை ஆதி கோவலடித் தெரு நிமலதாஸ், மற்றும் த. பெ தர்மராஜ் ஆகிய இருவருமே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் கடற்படை யால் வேதாரண்யம் கடலோர பாதுகாப்புக் குழு ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டனர்.

இவர்கள் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...