ffbd4b75 dead
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். கடற்கரைகளில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்!

Share

யாழ்ப்பாணத்தின் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரை மற்றும் மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரை பகுதிகளில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாக தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில், இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன் , கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

இதேவேளை, வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரு சடலங்களும் , நெடுந்தீவு கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சடலமும், மருதங்கேணி கடற்கரை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...