sisuuu death
செய்திகள்இலங்கை

பச்சிளம் சிசு புதைப்பு – தாய் கைது!

Share

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வீட்டின் அருகில் புதைப்பட்ட சிசு ஒன்றின் சடலம்  தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதமேயான குறை பிரசவத்தில் பிரசவித்த சிசுவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் திருமணம் செய்யாத 25 வயதுடைய பெண் கருவுற்ற நிலையில் வீட்டாரின்  நிர்ப்பந்தத்தில் வீட்டிலேயே கருக்கலைப்பு இடம்பெற்று சிசுவை பிரசவித்துள்ளார்.

குறித்து சிசுவை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். சிசுவின் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு குறித்த யுவதி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு பொலிஸார் யுவதியின் வாக்குமூலத்தை பதிவுசெய்து நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.

இதன்போது நீதிவான் குழந்தையை பிரசவித்த தாய்க்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...