செய்திகள்இலங்கை

40 இலட்சம் பெறுமதியுடைய இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீட்பு!

Share

இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளும் கும்பல் ஒன்றினாலேயே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த பயணிகளை சோதனை இட்டபோதே குறித்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள பொருள்கள் 40 லட்சம் சந்தைப் பெறுமதியுடையவை என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிட்ப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...