செய்திகள்இலங்கை

40 இலட்சம் பெறுமதியுடைய இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீட்பு!

Share

இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளும் கும்பல் ஒன்றினாலேயே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த பயணிகளை சோதனை இட்டபோதே குறித்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள பொருள்கள் 40 லட்சம் சந்தைப் பெறுமதியுடையவை என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிட்ப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...