gotabaya rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

அரச தலைவர் என்ற தகுதி எனக்கு இல்லை: பகிரங்கமாகக் கூறினாரா கோட்டா?

Share

அரச தலைவர் பதவியினை வகிப்பதற்குரிய தகைமை தன்னிடம் இல்லையென்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மஹிந்த ராஜபக்ஷவின் சகோதாரராக இருப்பதற்கே தகுதியுள்ளதெனக் கூறியுள்ளார். “குடும்ப ஆட்சி எங்கும் உள்ளது. ஆனால், மக்கள் தான் அரசியலுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில்லை.

இதனைப் படித்த இளைஞர்களால் தான் மாற்றியமைக்க முடியும். இதற்காக கட்சி பேதங்களைத் துறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய முடியாது போகின்ற அரசியல்வாதிகள், பதவியினைத் துறக்கும் நிலையானது இலங்கையில் உருவாக வேண்டும்.

இல்லை என்றால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கியே செல்லும்” என எச்சரித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...