keralarains 570 850
செய்திகள்இந்தியா

கேரளாவைத் தாக்கும் கனமழை-உத்தரகாண்டிலும் உயரும் உயிரிழப்புக்கள்!

Share

இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை பெய்துவருவதால் அங்கு பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடும்மழை பெய்துவரும் நிலையில், அங்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கு, செப்ரெம்பர் 21ஆம் திகதி வரையும் இந்த விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை கேரள மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நீடிக்கும் எனவும், இதனால் அப்பகுதியில் பெருமளவு பாதிப்புக்களுக்கான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலட்சத்தீவு கடற்கரை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலேயே குறித்த மாநிலங்களில் அதிக மழை பெய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும்மழை பெய்துவருவதால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 48 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....