000 9Y62D6
செய்திகள்உலகம்

ரஸ்யாவிற்கு அடிக்கு மேல் அடி!!

Share

உக்ரைன் லுஹான்ஸ்க் மாகாணத்தின் ரஷ்ய பிரிவிணைவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது தயாராக இருந்த உக்ரைன் ராணுவம் ஷ்சாஸ்டியா நகரத்தின் மீதான தாக்குதலை முறியடித்துள்ளது.

உக்ரைனில் இன்று அதிகாலை 5 மணியளவில் உக்ரைனின் மாநில எல்லையான ரஷிய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் குடியரசு அருகிலுள்ள பிரிவுகளில் பெலாரஸின் ஆதரவுடன் ரஷ்ய படைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் சைட்டோமிர் ஆகிய பகுதிகளில் பீரங்கி,சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி எல்லைப் பிரிவுகள், எல்லைக் கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ரஷ்ய பிரிவினைவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட இருந்த ஷ்சாஸ்டியா நகரம் மீட்கப்பட்டது. தாக்குதல் நடத்த முயற்சித்தபோது ஆயுதங்கள், உபகரணங்கள் அழிக்கப்பட்டன.

இதில் சுமார் 50 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாக போர் திறம் வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...