patali champika ranawaka
செய்திகள்இலங்கை

ஒக்டோபருக்குள் நாட்டில் பஞ்சம்! – எச்சரிக்கிறார் சம்பிக்க

Share

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாவுக்கு வாங்கி 98 ரூபாவுக்கு மக்களுக்கு கொடுக்கலாம்.92 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய சீனியை 220 ரூபாவுக்கு விற்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதித்துள்ளார்.

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் அவர் இராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு இராஜினாமா செய்யாது விலை ஏற்றத்துக்கு ஏற்றவாறு அறிக்கைகள் வழங்கியவாறு உள்ளார். இந்நிலை தொடருமாக இருந்தால், வர்த்தக அமைச்சர் சீனி மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றே கருதமுடியும்.

தற்போது ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் இலாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபா வரை அவர்களால் சம்பாதிக்க முடியும் – என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....