முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம், அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி, சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.