litro 1
செய்திகள்அரசியல்இலங்கை

டொலர் தட்டுப்பாடு! – துறைமுகத்தில் தேங்கி கிடங்கும் எரிவாயு சிலிண்டர்கள்

Share

சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க முடியாமல்உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேற்படி மூன்று கப்பல்களும் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆறு தினங்களாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு கப்பலுக்கும் நாளாந்தம் 15,000 அமெரிக்கன் டொலர் தாமதத்திற்கான கட்டணம் வழங்க நேரிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் கப்பல் துறைமுகத்தில் நங்கூடரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு செலுத்தவேண்டிய டொலர் இதுவரை கிடைக்கவில்லை.

நாளாந்தம் சுமார் 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் கடந்த ஆறு தினங்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் உருவாகியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...