09 51 450545944pfizer vaccine 400
செய்திகள்இலங்கை

தடுப்பூசி பெற்றவர்களுக்கு குறைகிறது நோய் எதிர்ப்பு சக்தி!

Share

இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுக்கொண்டோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதிகமானோருக்கு கொரோனாத் தொற்றுக்கு எதிராக வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைகின்றன.

இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டோருக்கு 6 மாதங்களுக்குப் பின் நோயெதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைவடைகிறது என உலகளவில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஐந்து முதல் 6 வாரங்கள் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே சுகாதாரவிதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...