stikecvcv
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பளம் அதிகரிக்காவிடின் போராட்டத்தில் இறங்குவோம் – அரச ஊழியர்கள் போர்க்கொடி

Share

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கல் வேண்டும்.

இரண்டு வார காலத்துக்குள் தீர்வு இல்லாது விடின் முன்னறிவித்தல் இன்றி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கப்பட்டுள்ளார்.

இதனால் 1.5 மில்லியன் அரச ஊழியர்களும் அவர்களை சார்ந்துள்ள 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகவேண்டியுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் செலவாக 58 ஆயிரம் காணப்படுகிறது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் வாரத்துள் கவனம் செலுத்தாவிடின் எந்தவித முன்னறிவித்தலுமின்றி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேருமென அவர்கள் அறிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...