eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

Share

 

நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

NSACP இந்த தரவு அறிக்கைகளின்படி, 2920 நோயாளிகள் ஹெர்பெஸ் நோயாலும், 2284 நோயாளிகள் பிறப்புறுப்பு மருக்களாலும், 1289 நோயாளிகள் சிபிலிஸ் நோயாலும், 692 நோயாளிகள் கொனோரியா நோயாலும், மற்றும் 2847 நோயாளிகள் பிற பாலியல் சார்ந்த நோய்த்தொற்றுக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டு முதல் 874 எய்ட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

புண்கள், கொப்புளங்கள், பிறப்புறுப்புகளில் வலி, கட்டிகள் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலையை தடுக்க அல்லது குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டம் கூறுகின்றது.

மேலும், இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு தேவையான தகவல்களை KNOW4SURE.LK என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...