sakara
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளை வெளியேற்ற தயாராகும் மொட்டு கட்சி!

Share

எமது அபிவிருத்தி பயணத்தை குழப்புவதற்கு முற்படும் தரப்புகள் நிச்சயம் விலக்கப்படும். இனி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2022 ஆம் ஆண்டென்பது அபிவிருத்திக்குரிய வருடமாகும். அந்த இலக்கை நோக்கி வேகமாக பயணிப்பதே எமது நோக்கம். அதனை குழப்ப முற்படும் தரப்பு நிச்சயம் விலக்கப்படும். ஆளுங்கட்சியா, எதிரணியா என்பது முக்கியமில்லை. எவர் தடை ஏற்படுத்தினாலும் அது தகர்க்கப்படும்.

எம்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீற செயற்படமாட்டோம்.”- என்றார்.

அதேவேளை, பங்காளிக்கட்சிகளை அரவணைத்து பயணிக்க வேண்டியது தலைமைக்கட்சியின் பொறுப்பாகும் என மொட்டு கட்சிக்கு பிரதமர் மஹந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமரின் அறிவிப்பைகூட சவாலுக்குட்படுத்தும் விதத்தில் மொட்டு கட்சி செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...