suma 720x375 1
செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு! – ஆஜராகிறார் சுமந்திரன்

Share

தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித  உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடமிருந்து லொஹான் ரத்வத்தவின் குறித்த நடவடிக்கை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தற்போது குறித்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் எட்டு தமிழ்  அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் அரசியல் கைதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.

இதேவேளை கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...