corona death 3
செய்திகள்இலங்கை

வவுனியாவில் 94 பேருக்கு தொற்று! – இருவர் மரணம்

Share

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புவைத்திருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் , அன்டிஜென் பரிசோதனை முடிவுகளின் ஒரு பகுதி இன்று (23) வெளியிடப்பட்டிருந்தது.

இந்த முடிவுகளின்படி மேலும் 94 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இதேவேளை, வவுனியாவில் நேற்று இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சாந்தசோலை பகுதியிலுள்ள பெண் ஒருவரும் (வயது – 58), தவசிகுளம் பகுதியிலலுள்ள பெண் ஒருவருமே (வயது – 35) இவ்வாறு கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 6 வெளிநாட்டினர் கைது: விசா விதிமீறல் தொடர்பாக பொலிஸார் விசாரணை

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை, கந்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி...

world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரதுகல பூர்வீகக் கிராமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் மடுல்ல பிரதேசத்திற்குட்பட்ட ரதுகல (Rathugala) பூர்வீகக் கிராமத்தின் தலைவரான டானிகல மகா பந்தலகே சுதா...