kamban.j
இலங்கைசெய்திகள்

கம்பன் கழகம் நடத்தும் ‘முந்துதமிழ்’ நிகழ்வு

Share

அகில இலங்கை கம்பன் கழகமும் அவுஸ்திரேலிய கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் ‘முந்துதமிழ்” எனும் மாதாந்த இயலரங்கின் செப்டெம்பர் மாத நிகழ்வு நாளை மறுதினம் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்நிலை நிகழ்வாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிவாச்சாரியார் சிவஸ்ரீ இந்திரன் குருக்களின் மங்கல ஆராத்தியோடு ஆரம்பமாகவுள்ளது.

நிகா்வில் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கண.சிற்சபேசன்ஐயாவின் தலைமையில் ‘ஊழிற்பெருவலியாவுள’ என்ற பொருளிலான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

சிலப்பதிகாரத்தில் ஊழ் பேராசிரியர்.ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் திருக்குறளில் ஊழ் பேராசிரியர். இ.இராமச்சந்திரன் அவர்களும் கம்பராமாயணத்தில் ஊழ் புலவர் இரா.இராமமூர்த்திஅவர்களும் விரித்துரைக்க உள்ளனர்.

உலகெங்கிலும் நோயும் அச்சமும் நிறைந்திருக்கும் இன்றைய நிலையில் நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமானதாக சொல்லப்படும் ஊழின் வலியை அறிந்து பயன்பெற பெரியோர்கள் கூடி துணைசெய்ய இருக்கிறார்கள். இந்நிகழ்வை அனைவரும் கண்டுகளித்து பயன்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முந்துதமிழ் நிகழ்வு இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...