ச.செல்வேந்திரா தெரிவு இன்று செய்யப்பட்டார்.
இலங்கைசெய்திகள்

சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை

Share

சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்
டெலோ உறுப்பினர் சதீஸ் மற்றும் சுயேட்சைக் குழு சார்பில் செல்வேந்திரா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், போட்டியிட்ட டெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும், சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.

இந்த வாக்குகளின் அடிப்படையில் மேலதிக மேலதிக ஒரு வாக்கால் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் அண்மையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். இந்த நிலையில் தவிசாளர் தெரிவுக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய தவிசாளர் தேர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...