sugar
செய்திகள்இலங்கை

5,000 டொன் சீனி துறைமுகத்தில் தேக்கம்!!!

Share

கொழும்பு துறைமுகத்தில் 5,000 டொன் சீனி சிக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சதொச நிறுவனத்தின் பிரதான அதிகாரியால் தாமத கட்டணம் செலுத்தி ஏற்பட்ட தாமதமே, தற்போது சீனித் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகும். தற்போது சதொச நிறுவனம் தலையிட்டு துறைமுகத்தில் தேங்கியுள்ள குறித்த சீனித் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சீனி தொகை நாளை அல்லது நாளைமறுதினம் விடுவிக்கப்படும் எனவும், அதன் பின்னர் அவை உரிய முறையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...