நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

Share

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல் என நினைத்து வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் மூன்று நாள்களாகியும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் பரவலாக கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த வர்த்தகரை நலம் விசாரிப்பதற்காகச் சென்ற அவரின் உறவினர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், யாழிலும் தொற்றாளர்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் விழிப்புணர்வின்றி பொறுப்பற்ற நிலையில் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகலால் சுகாதாரத்துறையினர் விசனமடைந்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...

chathuranga
செய்திகள்இலங்கை

எச்சரிக்கை: பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர்...