அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா
இந்தியாசெய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா

Share

அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ரத்தாகி, பல நாடுகளுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்லது. உலகின் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா சுமார் 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா நாடுகள் அரிசியை பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. கடந்த 2022ல் உலக அரிசி ஏற்றுமதி என்பது 5.54 கோடி டன்களாக இருந்தது.

அதில் 2.22 கோடி டன்கள் இந்தியாவில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாசுமதி அல்லாத அரிசி 1.8 கோடி டன்கள். இந்த 1.8 கோடி டன்னில் 1.03 கோடி டன் வெள்ளை அரிசி.

இதுவே தற்போது அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அரிசி உணவை பயன்படுத்தும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க, உணவுப் பாதுகாப்புத் தேவைகளின்கீழ் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடையில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, உணவுப் பாதுகாப்புக்கான தேவை உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் இந்திய அரசு எந்த நாடுகளுக்கெல்லாம் அனுமதியளிக்கிறதோ, அந்த நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

மேலும், தடை உத்தரவு வெளியான காலகட்டத்தில் கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாஸ்மதி அரிசிக்கு திரும்புவார்கள் என இந்திய அரசாங்கம் கருதுகிறது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25% என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....