201909161719010612 Drunken drive case Rs 15 thousand fine to erode youth SECVPF
செய்திகள்இலங்கை

நிர்ணய விலையை மீறின் 20 லட்சம் தண்டம்!!

Share

அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு அரசாங்கத்தால் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்வோருக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு அமைவாக கூடுதல் விலைக்கு பொருள்களை விற்போர் தொடர்பில் முதலாவது முறைப்பாடு கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தப்பட்டால் அறவிடப்படும் தண்டப்பணத்தை 10 லட்சம் வரை அதிகரிப்பதற்கும், இரண்டாவது முறைப்பாடு கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தப்பட்டால் அறவிடப்படும் தண்டப்பணத்தை 20 லட்சம் வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...