நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடருமாயின், வடக்கு கிழக்கு கிளர்ந்தெழ வேண்டி ஏற்படும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்குள் அடாவடியாக பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதுடன், அவர்களில் இருவரை முட்டுக்காலில் இருத்திவைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்திய ஆளுங்கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் வடக்கும் கிழக்கும் கொரோனாவைத் தாண்டியும் கிளர்ந்தெழும்.
யாருக்கும் தெரியாமல் கொரோனாக் காலத்தில் அரசியல் கைதிகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – என்றுள்ளார்.
Leave a comment