ju
இலங்கைசெய்திகள்

கப்ராலுக்கு எதிராக ரிட் மனு!

Share

மத்திய வங்கியின் ஆளுராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

கீர்த்தி தென்னக்கோன் தனது மனுவில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் பல பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்பட்டார். எனவே அவரே அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.

இவற்றை கருத்திலெடுத்து அஜித் நிவாட் கப்ராலை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிப்பதுடன் அவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதை தடுத்து கட்டளை பிறப்பிக்குக என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...