gota ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கமே இது!

Share

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றது. இந்த அரசாங்கம் ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இப்போதும் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள ராஜபக்‌ஷ  அணியும், ரணில் விக்கிரமசிங்க என்ற தனி ஒருவரும் இணைந்து அரசாங்கத்தை கொண்டு செல்கிறோம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இரு தரப்பும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியும். இதன்போது  மேலும் பல கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ  ஆகிய இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள். எமது அணியும் அனுபவம் மிக்க அணியாக உள்ளது. ஆகவே இருவரும் இணைந்து பயணிப்பதுடன் மேலும் ஏழு அல்லது எட்டு கட்சிகளை ஒன்றிணைத்து  பயணிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...