vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒளிவு மறைவு இன்றி ஒன்றிணையுங்கள்! – புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

Share

” பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண தேசிய ரீதியில் இணையுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எம்மால் முன்னெடுக்கப்படும் நகர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. ”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இன, மத, மற்றும் மொழி ரீதியாக காணப்படும் பிளவை – மோதல் தடுப்பதன் மூலம் கிராமிய மட்டத்தில் சமாதானத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

” இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் உருவான ஏனைய பிரச்சினைகளுக்காக தீர்வை காண்பது, அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பவற்றை தேசிய பொறிமுறை மூலம் நம்பிக்கையான கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தற்போது கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் டயஸ்போராக்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன். கலந்துரையாடல் மூலம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இன, மத மற்றும் மொழி ரீதியாக மோதல்கள் ஏற்படுவதை தடுத்து மக்களிடையே ஒற்றுமை,நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்ட கட்டமைப்பு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் அமைச்சர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...