vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒளிவு மறைவு இன்றி ஒன்றிணையுங்கள்! – புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

Share

” பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண தேசிய ரீதியில் இணையுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எம்மால் முன்னெடுக்கப்படும் நகர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. ”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இன, மத, மற்றும் மொழி ரீதியாக காணப்படும் பிளவை – மோதல் தடுப்பதன் மூலம் கிராமிய மட்டத்தில் சமாதானத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

” இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் உருவான ஏனைய பிரச்சினைகளுக்காக தீர்வை காண்பது, அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பவற்றை தேசிய பொறிமுறை மூலம் நம்பிக்கையான கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தற்போது கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் டயஸ்போராக்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன். கலந்துரையாடல் மூலம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இன, மத மற்றும் மொழி ரீதியாக மோதல்கள் ஏற்படுவதை தடுத்து மக்களிடையே ஒற்றுமை,நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்ட கட்டமைப்பு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் அமைச்சர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...