Dilwin Silva
அரசியல்இலங்கைசெய்திகள்

அடக்குமுறைகள் தொடர்பில் ஜெனிவாவில் நடவடிக்கை!

Share

” ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால்தான் மக்கள் வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் அவர்கள் தற்போது வேட்டையாடப்படுகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.

வலுவான அரசுகள் போராட்டங்களுக்கு அஞ்சுவதில்லை. தற்போதைய அரசாங்கம் பலவீனமாக இருப்பதால்தான், சிறு எதிர்ப்புகளுக்குக்கூட அஞ்சுகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. பெருமளவான இலங்கையர்கள் முறைப்பாடுகளை முன்வைப்பார்கள். பேரவையின் கவனத்தை ஈர்க்க நாமும் நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...