இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேசிய லொத்தர் சபையின் ஒரு விசேட செயற்திட்டத்தின் கீழ் ஊழியர்களை நியமிக்கும் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ரவி கருணநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.