297959776 6302833759744167 3658116457016247084 n
இலங்கைசெய்திகள்

சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கியது அரசு!

Share

சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இடமளிப்பது தொடர்பில் அண்மையில் கூட தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக அதிகாரிக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல் இலங்கைக்குள் வருவதால், இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்தியா இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே சீனாவின் கப்பல் நாட்டிற்கு நுழைய இடமளித்துள்ளமை சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், ஜனாதிபதியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். எனினும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதை எதிர்ப்பதற்கு நிலையான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என ஜனாதிபதி, அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களை முன்வைக்காத காரணத்தினால் சீனக் கப்பல், நாட்டுக்குள் வர , இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்து நங்கூரமிடப்படவுள்ளது. சீனாவின் இந்த கப்பல் குறைவான வேகத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...