Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

21வது திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று! – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Share

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் இன்று அரசுக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை கட்சி நியமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

21வது திருத்தம் தொடர்பான மூன்று பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஏனைய இரண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்ட வரைவை பெற்றுக்கொண்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வரைவு தொடர்பாக சில கவலைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை விட ஜனநாயக அடிப்படைகளை வலுப்படுத்தும் முன்மொழிவுகளை அரசியலமைப்பு திருத்தம் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ம்’ என்ற கோஷத்துடனான இப்போராட்டம், நாளை 50 ஆவது நாளில் கால்பதிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...