Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

21வது திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று! – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Share

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் இன்று அரசுக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை கட்சி நியமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

21வது திருத்தம் தொடர்பான மூன்று பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஏனைய இரண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்ட வரைவை பெற்றுக்கொண்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வரைவு தொடர்பாக சில கவலைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை விட ஜனநாயக அடிப்படைகளை வலுப்படுத்தும் முன்மொழிவுகளை அரசியலமைப்பு திருத்தம் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ம்’ என்ற கோஷத்துடனான இப்போராட்டம், நாளை 50 ஆவது நாளில் கால்பதிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...