Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது! – சபையில் விமல்

Share

” புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. மக்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, பிரதமர் உடனடியாக பதவி விலகி, புதிய அரசு உருவாக இடமளிக்க வேண்டும்.” – என்று விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அமைச்சரவையை நியமிப்பதால் பிரச்சினை தீராது. பிரதமர் உடன் பதவி விலக வேண்டும். சர்வக்கட்சி இடைக்கால அரசு அமையப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த அரசியல் நெருக்கடி தீராது.

என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினர். அப்போது மூத்த உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். கர்மவினை அவர்களை விடவில்லை .இன்று பதவிகள் இன்றி பின்வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். பஸில் ராஜபக்ச என்பவர் எல்லாவற்றையும் சீரழித்துவிட்டார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...