galewela
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம் சுற்றிவளைப்பு! – இயந்திரங்களுடன் ஐவர் கைது

Share

கலேவெல பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில்  சட்டவிரோதமாக இயங்கிவந்த  கல் குவாரியை தம்புள்ளை விசேட அதிரடி படையினர் இன்று  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 60 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களை விசேட அதிரடி படையினர் சுற்றிவளைத்ததுடன், சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  அனுமதிப்பத்திரத்துடன் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னரும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் குவாரி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

நான்கு அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் ஒரு டிப்பர் வாகனங்கள் இதன்போது மீட்கப்பட்டது.  உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்த இயந்திரங்களின் உதவியுடன் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி வருவதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இரண்டு கல்குவாரிகளும் தம்புள்ளை பகுதியில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு சொந்தமானது என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் இருந்து 200-300 மீற்றர் தூரத்தில் குவாரி அமைந்திருந்ததாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...