Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
செய்திகள்அரசியல்இலங்கை

9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை

Share

9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபைஒத்திவைப்புவேளை விவாதம் நடைபெறவுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பிரதான தரப்புகள் அவதானம் செலுத்தியுள்ளன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன் என கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். அதற்கான திட்டங்கள் மற்றும் புதிய அரசமைப்பு எப்போது இயற்றப்படும் போன்ற தகவல்களை அவர் வெளிப்படுத்துவார் என்பதாலேயே , ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது சர்வதேசத்தின் கவனமும் திரும்பியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...